sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வசதிகள் இல்லை...நாய்கள்,கொசுக்கள் தொல்லை புலம்பலில் புஷ்பம்மாள் நகர்,சோபா நகர் குடியிருப்போர்

/

வசதிகள் இல்லை...நாய்கள்,கொசுக்கள் தொல்லை புலம்பலில் புஷ்பம்மாள் நகர்,சோபா நகர் குடியிருப்போர்

வசதிகள் இல்லை...நாய்கள்,கொசுக்கள் தொல்லை புலம்பலில் புஷ்பம்மாள் நகர்,சோபா நகர் குடியிருப்போர்

வசதிகள் இல்லை...நாய்கள்,கொசுக்கள் தொல்லை புலம்பலில் புஷ்பம்மாள் நகர்,சோபா நகர் குடியிருப்போர்


ADDED : ஏப் 03, 2025 04:53 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 04:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: முறையற்ற ரோடுகள், சாக்கடைகள் இல்லை, நாய்கள், கொசுக்கள் தொல்லை என பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர் திண்டுக்கல் புஷ்பம்மாள் நகர் , சோபா நகர் குடியிருப்பு வாசிகள்.

திண்டுக்கல் - தாடிகொம்பு ரோட்டில் உள்ளது புஷ்பம்மாள் நகர் , சோபா நகர் குடியிருப்போர் நலச்சங்கம். இச்சங்கத்தின் தலைவர் வீரமணி, செயலர் சிவக்குமார், துணைச் செயலர் தேவராஜ் ,உறுப்பினர்கள் முருகன், லட்சுமணன், ராதாகிரஷ்ணன் கூறியதாவது : 6 ஆண்டுகளாக வளர்ந்து வரும் பகுதிகளாக சுற்றுப்பகுதிகள் உள்ளன. போதிய அடிப்படை வசதிகள் இல்லை. குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதற்கான ரோடு சேதமடைந்திருக்கிறது. குடியிருப்பகுதியை சுற்றி எந்த இடத்திலும் சாக்கடைகள் இல்லை. சாக்கடை இல்லாததால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்குகிறது. பல நேரங்கிளில் சொந்த செலவில் அகற்ற வேண்டியதாய் உள்ளது.மழை பெய்தால் காலி மனைகள் உட்பட அனைத்து இடங்களிலும் நீர் குளம் போல் தேங்குகிறது. நீர் செல்லவும் வழியில்லை. அதுவாக வடிந்தால் தான் உண்டு. நீர் செல்ல வடிகால்கள் இல்லாததது பிரதான பிரச்னையாக உள்ளது. மிகவும் முக்கிய பிரச்னையே தெரு விளக்குகள் இல்லாததுதான்.

இதனால் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் சிரமப்படுகின்றனர். விஷப் பூச்சிகள், பாம்புகள் வருவது தெரியவதில்லை. இதனால் மாலை நேரங்களுக்கு மேல் வெளியே வர தயங்க வேண்டியதாக உள்ளது.

தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகமாகிறதே தவிர குறைந்தபாடில்லை. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. குழந்தைகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

குடிநீர் குழாய்கள் இல்லை. மாநகராட்சி வண்டிகளும் வருவதில்லை. எல்லாம் சொந்தமாக ஏற்படுத்தினால் மட்டுமே உண்டு. பொதுக்குழாய் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. வரிகள் அனைத்துமே வசூல் செய்கின்றனர். ஆனால் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில்லை. பலமுறை பலரிடம் முறையிட்டும் பயனில்லை என்றனர்.






      Dinamalar
      Follow us