sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பொறுப்புணர்வு இல்லையே: இறுதிசடங்கு ஊர்வலம் போது ரோடுகளில் வீசப்படும் பூக்கள் விபத்துகளுக்கு வழி வகுப்பதால் தேவையாகுது விழிப்புணர்வு

/

பொறுப்புணர்வு இல்லையே: இறுதிசடங்கு ஊர்வலம் போது ரோடுகளில் வீசப்படும் பூக்கள் விபத்துகளுக்கு வழி வகுப்பதால் தேவையாகுது விழிப்புணர்வு

பொறுப்புணர்வு இல்லையே: இறுதிசடங்கு ஊர்வலம் போது ரோடுகளில் வீசப்படும் பூக்கள் விபத்துகளுக்கு வழி வகுப்பதால் தேவையாகுது விழிப்புணர்வு

பொறுப்புணர்வு இல்லையே: இறுதிசடங்கு ஊர்வலம் போது ரோடுகளில் வீசப்படும் பூக்கள் விபத்துகளுக்கு வழி வகுப்பதால் தேவையாகுது விழிப்புணர்வு


ADDED : அக் 14, 2025 04:37 AM

Google News

ADDED : அக் 14, 2025 04:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாண்டிக்குடி: திண்டுக்கல் மாவட்டத்தில் இறுதி சடங்கின் போது ரோட்டில் வீசப்படும் மலர்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தை பொறுத்தமட்டில் இறப்பு ஏற்படும் நிலையில் தேர் உள்ளிட்ட கட்டுமானங்களை ஏற்படுத்தி இறந்தவர்களின் உடல் சுடுகாட்டிற்கு எடுத்து செல்வது வழக்கம். தற்போதைய நாகரீக காலத்தில் இதற்கென பிரத்யேக வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. இத்தகைய வாகனங்களில் ஏராளமான மலர்கள் அலங்கரிக்கப்பட்டு இறந்தவரின் உடல் ரோடு மார்க்கமாக ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.இவ் வாகனத்தின் பின்னணியில் வருபவர்கள் மலர்களை ரோட்டில் வீசி எறிவது, மின் கம்பிகள், மின் ஒயர்களில் துாக்கி வீசுவது என விரும்பத் தகாத நிகழ்வுகளை ஏற்படுத்துகின்றனர். மேலும் மலர்கள் ரோட்டில் வீசப்படுவதால் இவை மழை பெய்யும் தருணத்தில் அழுகி ரோட்டில் வலவலுப்பாகி விபத்து உள்ளிட்ட பிரச்னைக்கு காரணமாக அமைந்து விடுகிறது. இதுபோன்று நாள்தோறும் இறுதி சடங்கின் போது வீசும் மலர்களால் விபத்துக்கள் நிகழ்கின்றன.இது போன்ற செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும் . இது போன்று ரோட்டில் வீசப்படும் மலர்களை தவிர்க்க சம்பந்தப்பட்ட ஊரக உள்ளாட்சி நகர அமைப்பு நிர்வாகங்கள் அறிவுறுத்தல் செய்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

.............

விபரீதங்களுக்கு வழி

துக்க நிகழ்விற்கு செல்வோர் இறுதி சடங்கின் போது வீசி செல்லும் மலர்களால் டுவீலர் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி பாதிக்கின்றனர். இதனால் உடல் உறுப்புகள் சேதமடைவதும், பலியாகும் நிலை உள்ளது. இறுதி சடங்கின் போது உடன் செல்லும் உறவினர்கள் சமூக பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி அமைப்பு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தனமுருகன், இயற்கை ஆர்வலர் ,கொடைக்கானல்.

..............






      Dinamalar
      Follow us