/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிராம சபை கூட்டத்தில் பிரதமர் குறித்து அவதுாறு குறைதீர் கூட்டத்தில் பா.ஜ., துணைத் தலைவர் முறையீடு
/
கிராம சபை கூட்டத்தில் பிரதமர் குறித்து அவதுாறு குறைதீர் கூட்டத்தில் பா.ஜ., துணைத் தலைவர் முறையீடு
கிராம சபை கூட்டத்தில் பிரதமர் குறித்து அவதுாறு குறைதீர் கூட்டத்தில் பா.ஜ., துணைத் தலைவர் முறையீடு
கிராம சபை கூட்டத்தில் பிரதமர் குறித்து அவதுாறு குறைதீர் கூட்டத்தில் பா.ஜ., துணைத் தலைவர் முறையீடு
ADDED : அக் 14, 2025 04:35 AM
திண்டுக்கல்: தாமரைப்பாடியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதுாறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர் கூட்டத்தில் பா.ஜ., மாவட்ட துணைத் தலைவர் பாலமுருகன் முறையிட்டார்.
கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 226 மனுக்கள் பெறப்பட்டன. 17 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். தமிழ்ப்புலிகள் மாவட்ட செயலாளர் கணேச பிரகாஷ் தலைமையில் நிலக்கோட்டை, ஜம்புதுரைக்கோட்டையை அடுத்த ஜே.உத்துப்பட்டி கிராம மக்கள் அளித்த மனுவில்,எங்கள் கிராமத்தில் உள்ள மயானத்துக்கு செல்லும் ஓடை பாதையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போது அதே பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக புகார் கொடுத்தால் அம்மையநாயக்கனுார் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டிருந்தனர்.
திண்டுக்கல் தாமரைப்பாடியை சேர்ந்த பா.ஜ., மாவட்ட துணைத் தலைவர் பாலமுருகன் கொடுத்த மனுவில், அக்.11 ம் தேதி தாமரைப்பாடியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து சிலர் அவதுாறாக பேசி உள்ளனர். அவர்கள் ஊராட்சிக்கு சம்பந்தமில்லாத நபர்கள். ஊராட்சிக்கு சம்பந்தமில்லாத நபர்களை கிராம சபை கூட்டத்தில் பேச அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.