ADDED : செப் 27, 2024 07:21 AM
திண்டுக்கல்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்ற ரத்தசோகை இல்லாத கிராமங்களை உருவாக்குவதற்கான ஊட்டச்சத்து உணவு திருவிழா நடந்தது.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடந்த இதை கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார். திட்ட இயக்குநர்கள் திலகவதி, தீஸ்பாபு, உதவித் திட்ட அலுவலர்கள் ராம்குமார், ஜீவ ரம்யா, வெற்றிச்செல்வன், பிரியங்கா கலந்து கொண்டனர்.
உணவு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது,
பழநி கோதைமங்கலம் வளனார் குழுவிற்கு முதல் பரிசு, நத்தம் வேலம்பட்டி திருமலைகருப்பு குழுவிற்கு 2ம் பரிசு திண்டுக்கல் தோட்டனுாத்து வெண்புறா குழுவிற்கு 3ம் பரிசு, ஆத்துார் பிள்ளையார் நத்தம் யமுனா குழு, வேடசந்துார் நாகம்பட்டி மதிதாமரை குழுவிற்கு சிறப்புப் பரிசு, சாணார்பட்டி கோம்பைபட்டி திருமகள் குழு, ஒட்டன்சத்திரம் மார்க்கம்பட்டி வசந்தம் குழு, வத்தலகுண்டு சந்தையூர் ரெட்ரோஸ் குழுவிற்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

