sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

உரிமம் கடைகளில் மக்காச்சோளம் விதைகள் வாங்க அதிகாரி அறிவுரை

/

உரிமம் கடைகளில் மக்காச்சோளம் விதைகள் வாங்க அதிகாரி அறிவுரை

உரிமம் கடைகளில் மக்காச்சோளம் விதைகள் வாங்க அதிகாரி அறிவுரை

உரிமம் கடைகளில் மக்காச்சோளம் விதைகள் வாங்க அதிகாரி அறிவுரை


ADDED : ஆக 13, 2025 02:13 AM

Google News

ADDED : ஆக 13, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல், கரூர் மண்டல விதை ஆய்வு துணை இயக்குநர் ஐரீன் பிரியதர்ஷினி அறிக்கை:

திண்டுக்கல் மாவட்டத்தில் 2024ல் 86 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோள சாகுபடி செய்யப்பட்டது. இதற்கு நிலையான நல்ல விலை கிடைப்பதால் இந்தாண்டும் சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும் . விவசாயிகள் ஹைபிரிட் வீரிய ஒட்டு ரக விதைகளையே விதைக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண்டுக்கு ஏறக்குறைய 50க்கு மேற்பட்ட வீரிய ஒட்டு ரகங்களில் 700 டன் மக்காச்சோள விதைகள் விவசாயிகளால் வாங்கப்பட்டு விதைப்பு செய்யப்படுகிறது.

மக்காச்சோள விதைகளை விற்பனை உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். உரிமம் பெறாமல் விதைகளை இருப்பு வைப்பதும், விற்பனை செய்வதும் குற்றமாகும். விதைக்கு விதைப்பரிசோதனை நிலையத்தால் வழங்கப்படும் முளைப்புத்திறன் அறிக்கை உள்ளதை சரிபார்த்து வாங்க வேண்டும்.

விதை விற்பனை செய்யும்போது பயிர், ரகம், குவியல் எண், காலாவதி நாள் குறிப்பிட்டு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us