sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரூ.70 லட்சம் மோசடியில் மேலும் ஒருவர் கைது

/

ரூ.70 லட்சம் மோசடியில் மேலும் ஒருவர் கைது

ரூ.70 லட்சம் மோசடியில் மேலும் ஒருவர் கைது

ரூ.70 லட்சம் மோசடியில் மேலும் ஒருவர் கைது


ADDED : அக் 16, 2024 02:19 AM

Google News

ADDED : அக் 16, 2024 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக அரசு பள்ளி ஆசிரியர்,வழக்கறிஞர் உட்பட மூவரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் என்.எஸ்.நகரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் மாணிக்கம் 55. இவரது மகன் சபரீசுக்கு அரசு வேலை வாங்கி தர உறவினரான கரூரை சேர்ந்த அச்சக உரிமையாளர் அருண்பாலன்42, என்பவரிடம் கேட்டார். இதற்காக ரூ.36 லட்சத்தை அவரிடம் வழங்கினார்.

குஜிலியம்பாறையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரிடம் அவரது 2 மகள்களுக்கும் மின்வாரியத்தில் வேலை தருவதாக கூறி ரூ. 26 லட்சம், ஆசிரியையாக உள்ள வேடசந்துாரை சேர்ந்த வழக்கறிஞர் சகாயராஜ் மனைவிக்கு பணியிடமாறுதல் பெற்று தருகிறோம் எனக்கூறி ரூ.8 லட்சம் என ரூ.70 லட்சத்தை வாங்கிவிட்டு அருண்பாலன் தலைமறைவானார்.

திண்டுக்கல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்.ஐ.,கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் சென்னையில் பதுங்கியிருந்த அருண்பாலனை கைது செய்தனர்.

இதில் தொடர்புடைய லவக்குமாரை நேற்று கோவையில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us