நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்தூர்:வடமதுரை பிலாத்தை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் ஜெகதீசன் 28. இவர் ஒட்டன்சத்திரத்தில் தனது வேலையை முடித்துவிட்டு, டூவீலரில் பிலாத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ஒட்டன்சத்திரம் -- வேடசந்துார் ரோட்டில் சாலையூர் நால்ரோட்டை அடுத்து சென்ற போது பின்னால் வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த ஜெகதீசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். வேடசந்துார் எஸ்.ஐ., ஜெயலட்சுமி விசாரிக்கிறார்.

