/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புதர் மண்டிய ஓடை; சேதமான ரோடுகள் அவதியில் ஒட்டன்சத்திரம் நகராட்சி 1 வது வார்டு மக்கள்
/
புதர் மண்டிய ஓடை; சேதமான ரோடுகள் அவதியில் ஒட்டன்சத்திரம் நகராட்சி 1 வது வார்டு மக்கள்
புதர் மண்டிய ஓடை; சேதமான ரோடுகள் அவதியில் ஒட்டன்சத்திரம் நகராட்சி 1 வது வார்டு மக்கள்
புதர் மண்டிய ஓடை; சேதமான ரோடுகள் அவதியில் ஒட்டன்சத்திரம் நகராட்சி 1 வது வார்டு மக்கள்
ADDED : ஜன 04, 2025 04:29 AM

ஒட்டன்சத்திரம்: சேதமடைந்த ரோடுகளால் போக்குவரத்து சிரமம், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதி என ஒட்டன்சத்திரம் நகராட்சி 1 வது வார்டு மக்கள் பரிதவிக்கின்றனர்.
குறிஞ்சிநகர், கூடலிங்கபுரம், பொன்னகரம், ஆத்துார், சீத்தப்பட்டி, தாராபுரம் ரோடு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் தாராபுரம் ரோட்டிலிருந்து ஆத்துார் செல்லும் ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. பொன்னகரம், குறிஞ்சி நகர் பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மக்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.
இந்த பகுதிகளுக்கு கள்ளிமந்தையம் துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் செய்யப்படுகிறது. இதனை மாற்றி ஒட்டன்சத்திரம் பகுதியிலிருந்து மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடலிங்கபுரம் வழியாக செல்லும் கழிவுநீர் ஓடை தூர்வாரப்படாமல் புதர் மண்டி உள்ளது. குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரம் பாதிக்கிறது. தாராபுரம் ரோட்டில் இருந்து குறிஞ்சி நகர், பழநிக்கு செல்லும் சர்வீஸ் ரோடுகளில் மின் விளக்கு இல்லை .
ரோடுகள் படுமோசம்
வி.ராமசாமி, பா.ஜ., நகர துணை தலைவர்: பைபாஸ் ரோட்டுப் பகுதியில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.தாராபுரம் ரோட்டில் இருந்து ஆத்தூர் செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். பைபாஸ் ரோடு பகுதியில் தெருவிளக்குகள் இல்லை. அடிக்கடி கொசு மருந்து அடிக்க வேண்டும். வார்டு பகுதியில் மின்சாரம் அடிக்கடி தடைபடுவதால் பாதிப்பு ஏற்படுகிறது.
தேங்கும் மழை நீர்
மூர்த்தி, கூலித் தொழிலாளி , கூடலிங்கபுரம்: வார்டில் குப்பை வாங்க வராததால் குப்பையை ஓடையில் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. புதர் சூழ்ந்து கிடப்பதால் கழிவு நீர் தேங்குகிறது. மழைக்காலத்தில் மேலும்தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. குழாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட ரோடுகளை சீரமைக்க வேண்டும்.
நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு
க.சாந்தி, கவுன்சிலர் (தி.மு.க.,): அமைச்சரின் முயற்சியால் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குறிஞ்சி நகரிலிருந்து சீத்தப்பட்டிக்கு புதிதாக ரோடு போடப்பட்டுள்ளது. ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
பொன்னகரம் - கொல்லப்பட்டி இணைப்பு ரோடு உட்பட பல இடங்களில் புதிதாக ரோடு போடப்பட்டுள்ளது. குறிஞ்சி நகரில் ரூ.45 லட்சத்தில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய் பணிக்காக சேதம் அடைந்த ரோடுகள் விரைவில் சரி செய்யப்படும் என்றார்.

