நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வேடசந்துார் கடைவீதியில் உள்ள கன்னிகா நகை மாளிகையில் உலக அமைதி என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடந்தது. பள்ளி மாணவர்கள் 105 பேர் பங்கேற்றனர்.
இதில் 9 பேர் வரைந்த ஓவியங்கள் சிறந்தஓவியமாக தேர்ந்தெடுக்கப்பட்டு கேடயம் பரிசும், மற்றவர்களுக்கு மெடல் பரிசும் வழங்கப்பட்டது. உரிமையாளர் தீபக் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும், மழைக்காலம் கருதி, பசுமை நிறைந்த மரங்களை உருவாக்கும் நோக்கில், விதைப்பந்துகளை வழங்கினார்.

