/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி பெருமாள் கோயில் ஆவணி விழா; செப்.2 துவக்கம்
/
பழநி பெருமாள் கோயில் ஆவணி விழா; செப்.2 துவக்கம்
ADDED : ஆக 27, 2025 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலசமுத்திரம்; பழநி பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் ஆவணி பிரம்மோற்ஸவ திருவிழா செப். 2ல் துவங்குகிறது .
பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் செப்.2 முதல் செப்.12 வரை ஆவணி பிரம்மோற்ஸவ திருவிழா நடைபெற உள்ளது. இதில் செப்.2 காலை 8:00 மணி மணிக்கு கொடியேற்றம்,செப்.8., மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம் ,செப்.9 இரவு பாரிவேட்டை,செப்.,10 காலை 7:00 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறுகிறது . செப்.12 விடையாற்றி உற்ஸவத்திற்கு பிறகு திருவிழா நிறைவடைகிறது.