sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பழநி கோயில் கார்த்திகை தீப திருவிழா நாளை துவக்கம்

/

 பழநி கோயில் கார்த்திகை தீப திருவிழா நாளை துவக்கம்

 பழநி கோயில் கார்த்திகை தீப திருவிழா நாளை துவக்கம்

 பழநி கோயில் கார்த்திகை தீப திருவிழா நாளை துவக்கம்


ADDED : நவ 26, 2025 04:40 AM

Google News

ADDED : நவ 26, 2025 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி முருகன் கோயில் திருகார்த்திகை தீபத் திருவிழா நாளை (நவ. 27) காப்பு கட்டுதல் உடன் துவங்கி டிச. 3 வரை நடக்கிறது.

பழநி முருகன் கோயிலில் நாளை (நவ. 27) மாலை 5:30 மணிக்கு சாயரட்சை பூஜையில் காப்பு கட்டுதல் உடன் கார்த்திகை தீப திருவிழா துவங்குகிறது. விழா நாட்களில் சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை, சின்னகுமாரசுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளல், யாகசாலை நடைபெறும்.

டிச. 2 மாலை 5:30 மணிக்கு சாயரட்சை பூஜையில் பரணி தீபம் ஏற்ற சண்முகர் அர்ச்சனை, டிச. 3 மஹா கார்த்திகை தினத்தை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், விசேஷ பூஜை, மதியம் 2:00 மணிக்கு சண்முக அர்ச்சனை, சண்முகர் தீபாராதனை ,மாலை 4:00 மணிக்கு சாய்ரட்சை பூஜை நடைபெறுகிறது. 4:45 மணிக்கு சின்னகுமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள முருகன் கோயிலில் நான்கு மூலைகளில் தீபம் ஏற்றப்படுகிறது. அதன் பின் 6:00 மணிக்கு திருகார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெறும். திருகார்த்திகை முன்னிட்டு டிச. 3 ல் தங்கரத புறப்பாடு நடைபெறாது.

இதுபோல் அன்று திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயிலிலும் திருக்கார்த்திகை தீபம் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us