sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநியில் கொடியேற்றத்துடன் துவங்கியது பங்குனி உத்திர திருவிழா

/

பழநியில் கொடியேற்றத்துடன் துவங்கியது பங்குனி உத்திர திருவிழா

பழநியில் கொடியேற்றத்துடன் துவங்கியது பங்குனி உத்திர திருவிழா

பழநியில் கொடியேற்றத்துடன் துவங்கியது பங்குனி உத்திர திருவிழா


ADDED : ஏப் 06, 2025 02:11 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 02:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருஆவினன்குடி கோயிலில் கொடுமுடி தீர்த்தக்காவடிக்கு புகழ் பெற்ற இத்திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்மண்டபத்தில் வள்ளி, தேவசேனா முத்துக்குமாரசுவாமி எழுந்தருளினார். கலசங்கள் வைத்து சிறப்பு பூஜை நடந்தது.

மஞ்சள் கொடியில் சூரியன், சந்திரன், வேல், மயில், சேவல், பாம்பு, தாம்பூலம், மணி, விளக்கு வரையப்பட்ட கொடியை கொடிக்கம்பம் முன் வைத்து பூஜைகள் நடந்தது.

அதன்பிறகு காலை 11:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. திரண்டிருந்த பக்தர்கள் 'அரோகரா' கோஷங்களை எழுப்பி வழிபட்டனர்.

கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர். இதையடுத்து உச்சிக்கால பூஜையில் முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவிற்காக சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது. இவ்விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு, ஏப்., 9 முருகன் கோயிலில் தங்க ரத சுவாமி புறப்பாடு, விழா 6ம் நாளான ஏப்., 10 காலை கிரி வீதியில் பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.

திருக்கல்யாணம்


முக்கிய நிகழ்வாக ஏப்., 10 மாலை 5:30 மணிக்கு வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம், இரவு 8:30 மணிக்கு வெள்ளி தேரோட்டம், ஏப்., 11 மதியம் 12:00 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருள மாலை 4:30 மணிக்கு பங்குனி உத்திர தேரோட்டம், ஏப்., 14 மாலை தெப்பத்தேரோட்டம் நடக்கிறது.

இதையடுத்து அன்றிரவு கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைகிறது.

இவ்விழாவையொட்டி ஏப்., 10 முதல் ஏப்., 13 வரை தங்க ரத புறப்பாடு நடக்காது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us