/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பட்டிவீரன்பட்டி பேரூராட்சி கூட்டம்
/
பட்டிவீரன்பட்டி பேரூராட்சி கூட்டம்
ADDED : மே 31, 2025 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி பேரூராட்சி கூட்டம் தலைவர் சியாமளா தலைமையில் நடந்தது.துணைத் தலைவர் கல்பனாதேவி அருண்குமார் முன்னிலை வகித்தார்.
செயல் அலுவலர் கோபிநாத் வரவேற்றார். தென்றல்நகர், மகாலட்சுமிநகர், சக்திநகர், மகாலட்சுமி, லாசர்நகர் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க தரைமட்ட தொட்டி ,பைப்லைன் அமைக்க தீர்மானிக்கப்பட்டது .
காமராஜர்புரத்தில் பேவர்பிளாக் , அம்பேத்கார் நகரில் சமுதாய கூடம் கட்டுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இளநிலை உதவியாளர் மோகனபிரியா நன்றி கூறினார்.