sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இதையும் கொஞ்சம் கவனியுங்க: நெடுஞ்சாலையில் காத்திருக்கும் ஆபத்துக்கள்

/

இதையும் கொஞ்சம் கவனியுங்க: நெடுஞ்சாலையில் காத்திருக்கும் ஆபத்துக்கள்

இதையும் கொஞ்சம் கவனியுங்க: நெடுஞ்சாலையில் காத்திருக்கும் ஆபத்துக்கள்

இதையும் கொஞ்சம் கவனியுங்க: நெடுஞ்சாலையில் காத்திருக்கும் ஆபத்துக்கள்

1


ADDED : நவ 28, 2024 06:14 AM

Google News

ADDED : நவ 28, 2024 06:14 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்லில் இருந்து மதுரை, நத்தம், திருச்சி, கரூர், பழநி போன்ற ஊர்களுக்கு செல்லும் ரோடுகள் தற்போது நான்குவழிச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. போக, வர என இரு தனித்தனி வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்களின் வேகமும் அதிகமாக உள்ளது.

குறிப்பிட்ட இடங்களில் வாகனங்களின் வேகத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பு பலகைகள் வைத்திருந்தாலும் இதை சில வாகன ஓட்டிகள் பொருட்படுத்தாமல் செல்வதால் விபத்துக்கள் நடக்கின்றன. உயிரிழப்புகளும் அதிகம் நடக்கின்றன. கிராம ரோடுகளை பொறுத்தவரை அசாம்பவிதம் ஏற்பட்டாலோ, ஏற்பட வாய்ப்பு இருந்தாலோ பள்ளி, அங்கன்வாடி மையங்கள் இருந்தலோ அப்பகுதியில் வேகத்தடைகளை அமைத்துவிடுவர். ஆனால் நான்குவழிச்சாலையில் இஷ்டத்திற்கு வேகத்தடைகளை அமைக்க முடியாத நிலையில் போலீசாருக்கு கிடைத்த ஒரு ஆயுதமே பேரி கார்டுகள்.

இதனால் மாவட்டத்தில் நான்குவழிச்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் ஏராளமான இடங்களில் பேரி கார்டுகள் வைக்கப்பட்டு வாகனங்களின் வேகம் இப்பகுதியில் கண்டிப்பாக குறைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாய நிர்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்விடங்களில் வேகமாக வரும் டிப்பர், லாரி போன்றவற்றில் இருந்து கற்கள், தென்னை மட்டைகள், விறகுகள், செங்கல் என பலவித பொருட்கள் கிழே விழுந்து அப்புறப்படுத்தாமல் விடப்படுகின்றன. இவற்றின் மீது டூவீலர்கள் ஏறும்போது தடுமாற்றம் ஏற்பட்டு அருகில் செல்லும் வாகனங்களுடன் மோதி கொடூர விபத்துக்கு வாய்ப்பாக உள்ளது. டூவீலருடன் தவறி விழுந்தும் பாதிப்படையும் நிலை உள்ளது. சுங்கசாவடிகள் மூலம் வாகனங்களிடம் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்தி வசூல் செய்கின்றனர். டூவீலர்களிடம் கட்டண வசூல் இல்லை. இதனால் டூவீலர் வாகன ஓட்டிகளை பாதுகாப்பதில் சுங்கச்சாவடி நிர்வாகங்களுக்கு ஆர்வம் இல்லையோ என்ற சந்தேகமும் மக்களிடம் உள்ளது. இதுபோன்ற நெடுஞ்சாலை ஆபத்துகளையும் தடுக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us