ADDED : ஜன 06, 2026 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தி.மு.க., தேர்தல் வாக்குறுதியான பணி ஓய்வு பெற்ற அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் இளங்கோ, பாக்கியலட்சுமி, சித்திரைக்கலா, துரைராஜ், சுப்புராம், அருணாதேவி முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் முபாரக்அலி, செயலாளர் சுகந்தி, மாநிலமுன்னாள் துணைத் தலைவர் விஜயகுமார் பேசினர்.

