sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஆதார் சேவை மையங்களை நாடும் மக்கள்; கூடுதலாக இல்லாததால் அலையும் அவலம்

/

ஆதார் சேவை மையங்களை நாடும் மக்கள்; கூடுதலாக இல்லாததால் அலையும் அவலம்

ஆதார் சேவை மையங்களை நாடும் மக்கள்; கூடுதலாக இல்லாததால் அலையும் அவலம்

ஆதார் சேவை மையங்களை நாடும் மக்கள்; கூடுதலாக இல்லாததால் அலையும் அவலம்

4


ADDED : ஜன 26, 2025 05:59 AM

Google News

ADDED : ஜன 26, 2025 05:59 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதார் சேவை மையங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால் பொதுமக்கள் அலைக்கழிப்படும் நிலை உள்ளது. இதன் எண்ணிக்கையை அதிகரித்து மக்களின் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆதார் எண் கட்டாயம் தேவைப்படுகிறது. அரசு நலத்திட்ட உதவிகள் , வங்கி சேவைகள், வருமான வரி கட்டுவதற்கும் ஆதார் எண் கட்டாயமாகும். அரசு தேர்வுகள் போட்டித் தேர்வுகள் என அனைத்து நிலையிலும் ஆதார் எண் அவசியம் ஆகிறது. ஆதார் எண் இருப்பதால் ஆள்மாறாட்டம் இன்றி அரசின் நலத்திட்ட உதவிகள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆதாரில் பெயர், முகவரி, பிறந்த தேதி, அலைபேசி எண் உள்ளிட்டவற்றை திருத்தம் செய்வதற்கும் ஆதாரை புதுப்பிப்பதற்கும் ஆதார் சேவை மையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டோக்கன் வழங்கப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆதார் சேவையை அனைத்து மக்களும் எளிதில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மாவட்டம் முழுவதும் ஆதார் சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

...........

சிறப்பு முகாம் நடத்தலாமே

கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், தலைமை போஸ்ட்ஆபீசில் அரசு ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. புதிதாக ஆதார் எடுப்பதற்கும் ஆதார் திருத்தங்களை செய்வதற்கும் தொலைதுா கிராமங்களை சேர்ந்தவர்கள் அதிகாலையிலே ஆதார் சேவை மையங்களுக்கு வந்து விடுகின்றனர். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கன் கிடைக்காதவர்கள் அடுத்த நாள் வர வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவது தொடர்கிறது. பொது மக்களின் நலன் கருதி ஆதார் சேவை மையங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சிகள் தோறும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு ஆதார் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கலாம்.

-- செ.வெங்கடேஷ், பா.ஜ., மேற்கு மாவட்ட வர்த்தகப் பிரிவு தலைவர், ஒட்டன்சத்திரம்.

................

..






      Dinamalar
      Follow us