sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரோட்டில் தேங்கும் கழிவுநீரால் தடுமாறும் மக்கள்....

/

ரோட்டில் தேங்கும் கழிவுநீரால் தடுமாறும் மக்கள்....

ரோட்டில் தேங்கும் கழிவுநீரால் தடுமாறும் மக்கள்....

ரோட்டில் தேங்கும் கழிவுநீரால் தடுமாறும் மக்கள்....


ADDED : டிச 27, 2024 05:23 AM

Google News

ADDED : டிச 27, 2024 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேதமான கைப்பிடி சுவர்கள் : வத்தலக்குண்டு உசிலம்பட்டி ரோட்டில் பாலத்தின் கைப்பிடிச்சுவர்கள் உடைந்து விட்டன. இதனால் வாகனங்கள் தவறி ஆற்றுக்குள் கவிழும் அபாயம் உள்ளது. விரைவில் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். --ஜான், சின்னுப்பட்டி.

-------ரோட்டில் தேங்கும் கழிவுநீர் : திண்டுக்கல் பழனியப்பாநகர் 2வது தெருவில் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் ரோட்டில் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளது. கழிவுநீர் செல்ல நடவடிக்கை வேண்டும்.

-பாலகுரு, திண்டுக்கல்.

--------சுரங்கபாதையில் மழைநீர் : திண்டுக்கல் ஆர்.எம்.காலனியிலிருந்து அறிவு திருக்கோயில் செல்லும் ரோட்டில் உள்ள ரயில்வே சுரங்க பாதையில் மழை நீருடன் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் மக்கள் தவிக்கின்றனர். தண்ணீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வர்ஷினி, திண்டுக்கல்.

--------செடிகள் படர்ந்த மின்கம்பம் : வேடசந்துார் கல்வார்பட்டியில் ரேஷன் கடை அருகே தெரு விளக்கு மின் கம்பத்தில் செடிகள் படர்ந்துள்ளது. மின்கம்பம் தெரியாத அளவுக்கு படந்துள்ள செடிகளால் விபத்து அபாயம் உள்ளது. மின்கம்பத்தில் உள்ள செடிகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும்.

-ஆர்.கண்ணபிரான், வேடசந்துார்.

---------

பள்ளத்தால் பரிதவிப்பு : பழநி பஸ் ஸ்டாண்டிலிருந்து திரு ஆவினன்குடி கோயிலுக்கு செல்லும் குளத்துார் ரோடு சேதம் அடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பக்தர்கள் அதிகம் செல்வதால் இந்த பள்ளத்தை சரி செய்ய வேண்டும்.

-குமரன், பழநி.

-------

குப்பையால் உருவாகும் சீர்கேடு : திண்டுக்கல் அனுமந்தநகரில் குவிந்த பிளாஸ்டிக் கலந்த குப்பையால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இவைகளை மாடுகள் மேய்வதால் பாதிப்பு ஏற்படுகிறது. குப்பையை கொட்டி அகற்றாமல் விடப்பட்டுள்ளதால் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முரளி, திண்டுக்கல்.

----------அச்சுறுத்தும் அங்கன்வாடி மையம் : நிலக்கோட்டை உச்சனம்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழைகாலங்களில் தண்ணீர் உள்ளே வருகிறது. குடிநீர் தொட்டியும் இல்லை. அங்கன்வாடி மையத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அய்யர்பாண்டி விளாம்பட்டி.






      Dinamalar
      Follow us