sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரோடுகளில் தேங்கும் மழைநீரால் மக்கள் அவதி...

/

ரோடுகளில் தேங்கும் மழைநீரால் மக்கள் அவதி...

ரோடுகளில் தேங்கும் மழைநீரால் மக்கள் அவதி...

ரோடுகளில் தேங்கும் மழைநீரால் மக்கள் அவதி...


ADDED : செப் 30, 2024 06:55 AM

Google News

ADDED : செப் 30, 2024 06:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெயர் பலகையால் தடுமாற்றம் : திண்டுக்கல் ஒடுக்கம் ரோடு அருகே பெயர் பலகையில் உள்ள எழுத்துக்கள் அழிந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தாங்கள் செல்லம் இடங்களுக்கு செல்லமுடியாமல் தவிக்கின்றனர். பெயர் பலகையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெகதீஷ், திண்டுக்கல்.

சேதமான நடைபாதை : திண்டுக்கல் பழநி ரோடு லாரி பேட்டை அருகே சாக்கடை நடைபாதை சேதம் அடைந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் பள்ளம் தெரியாமல் பலர் கீழே விழுகின்றனர். நடைபாதையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், திண்டுக்கல்.---

ரோட்டில் தேங்கும் மழைநீர் : எரியோட்டிலிருந்து கோவிலுார் செல்லும் நெடுஞ்சாலையில் புதுரோடு அருகே தார் ரோட்டில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இப்பகுதியில் சீரமைப்பு பணி செய்ய வேண்டும். --

-செந்தில்குமார், எரியோடு.---

மேடான ரோடால் விபத்து : ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டிலிருந்து மார்க்கெட் பைபாஸ் செல்லும் ரோட்டின் குறுக்கே 2 இடங்களில் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த இடங்கள் உயரமாகவும் ரோட்டின் பகுதி தாழ்வாகவும் இருப்பதால் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது.

-வேலுச்சாமி, ஒட்டன்சத்திரம்.---

அச்சுறுத்தும் குரங்குகள் : நத்தத்தில் அசோக்நகர் செட்டியார்குளத்தெரு, பஸ்ஸ்டாண்ட்,மீனாட்சிபுரம் பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம் செய்கின்றன. இதனால் குழந்தைகள், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். குரங்குகளை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வீரா, நத்தம்.

---மின்கம்பத்தில் படர்ந்த செடிகள் : நிலக்கோட்டை தாலுகா அம்மைய நாயக்கனுார் பேரூராட்சி ஏ.புதுார் கிராமம் கொடைரோடு மெயின்ரோட்டில் மின் கம்பத்தின் மீது செடிகள் படர்ந்துள்ளது. இதனால் அடிக்கடி தீப்பற்றும் நிலை உள்ளது. செடிகளை அகற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-க.ரதிஷ்பாண்டியன்,- பொம்மணம்பட்டி.-----

தொற்று பரப்பும் கழிவுநீர் : பழநி நெய்க்காரப்பட்டி பேரூராட்சி 7வது வார்டு எஸ்.கே.சி. நகரில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்து, நெய்க்காரபட்டி.






      Dinamalar
      Follow us