sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அறிவிக்காத மின்தடையால் இரு நாளாக மக்கள் அவதி

/

அறிவிக்காத மின்தடையால் இரு நாளாக மக்கள் அவதி

அறிவிக்காத மின்தடையால் இரு நாளாக மக்கள் அவதி

அறிவிக்காத மின்தடையால் இரு நாளாக மக்கள் அவதி


ADDED : பிப் 15, 2024 06:02 AM

Google News

ADDED : பிப் 15, 2024 06:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ராமசாமிகாலனி பகுதியில் நேற்று முன்தினத்திலிருந்து முறையாக மின்சாரம் இல்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். அதிகாரிகளை தொடர்பு கொண்ட போதிலும் பதில் கிடைக்கவில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ராமசாமிகாலனி சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 9:15 மணிக்கு மின்தடை ஏற்பட்டு இரவு 7:00 மணிக்கு வந்தது.

இதேபோல் நேற்றும் காலை 9:30 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. மாலை 5:00 மணி வரை மின்சாரம் வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டபோதிலும் முறையான பதிலளிக்காமல் இருந்ததால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.

தொடரும் இப்பிரச்னையால் 2 நாட்களாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவித்தனர். சில வீடுகளில் உணவு சமைக்க கூட முடியாத நிலை ஏற்பட்டது. அலைபேசிகளில் சார்ஜ் போடுவது முதல் எல்லாமே பாதிப்பு ஏற்பட இயல்பு வாழ்க்கையும் பாதித்தது. மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.

கேசவன், மின்வாரி உதவிசெயற்பொறியாளர், திண்டுக்கல்: நேற்று முன்தினம் பாலகிருஷ்ணாபுரம் ராமசாமி காலனியில் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை இருந்தது. நேற்று நெடுஞ்சாலைத்துறை பணிகள் நடந்ததால் மின்தடை ஏற்பட்டுள்ளது. மாலை 5:00 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது என்றார்.






      Dinamalar
      Follow us