sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தொற்று பரப்பும் கழிவுநீரால் பரிதவிக்கும் மக்கள்...

/

தொற்று பரப்பும் கழிவுநீரால் பரிதவிக்கும் மக்கள்...

தொற்று பரப்பும் கழிவுநீரால் பரிதவிக்கும் மக்கள்...

தொற்று பரப்பும் கழிவுநீரால் பரிதவிக்கும் மக்கள்...


ADDED : அக் 21, 2024 05:37 AM

Google News

ADDED : அக் 21, 2024 05:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொற்று பரப்பும் கழிவுநீர் : நத்தம் பரளிபுதுாரில் அரசு நடுநிலைப்பள்ளி எதிரே உள்ள பாலத்தில் மழை பெய்தாலே தண்ணீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. கழிவு நீரை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தங்கராஜ், பரளிபுதூர்.

சேதமான ரோடால் அவதி : தாராபுரம்- ஒட்டன்சத்திரம் ரோட்டிலிருந்து திண்டுக்கல் பைபாஸ் ரோட்டுக்கு செல்லும் சர்வீஸ் ரோடு சேதம் அடைந்துள்ளது. இதனால் அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தடுமாறுகின்றனர். சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-

-செல்வம்,ஒட்டன்சத்திரம்.----

திறந்தநிலையில் மின்கம்பம் : அய்யலுாரில் வாரச்சந்தை எதிர்புறம் இருக்கும் சர்வீஸ் ரோட்டில் உள்ள மின்கம்பத்தில் உள்ளி மின் பொருட்கள் திறந்தவெளியில் உள்ளது. இது தொடும் துாரத்தில் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ---

-செந்தில், அய்யலூர்.

------சகதியாகும் ரோடுகள் : சந்துார் கொடிக்கால்பட்டி தெற்கு தெருவில் ரோடு, சாக்கடை வசதி இல்லாதால் மழைநீருடன் கழிவு நீர் தேங்கி சகதியாக மாறி உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கால்வாய் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பூமிநாதன், வேடசந்துார்.

ஆபத்தை ஏற்படுத்தும் மின்கம்பம் : அம்மையநாயக்கனுார் வி.ஏ.ஓ., ஆர்.ஐ. அலுவலகத்திற்கு செல்லும் ரோட்டில் வளைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தால் விபத்து அபாயம் உள்ளது. மழை நேரங்களில் மின்கசிவு ஏற்படுகிறது. விளக்கு இல்லாததால் இருட்டாக உள்ளது. மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும்.

-முனியப்பன்,கொடைரோடு.

-சீர்கேடை ஏற்படுத்தும் சாக்கடை : திண்டுக்கல் காந்தி மார்க்கெட் கோட்டைகுளம் ரோட்டில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது. கழிவுகள் தேங்கியுள்ளதால் பாதிப்பு ஏற்படுகிறது. அதிக மக்கள் வந்து செல்லும் இடம் என்பதால் துார்வாரி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபு, திண்டுக்கல்.

குப்பையால் பாதிப்பு : திண்டுக்கல் தோட்டனுாத்து பகுதி ரோட்டோரங்களில் குப்பை அள்ளப்படாமல் குவிந்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் கலந்த குப்பையால் மண்வளம் பாதிக்கிறது. குப்பைகளை அகற்ற நடவடிக்கை வேண்டும்.

-கந்தசாமி, தோட்டனுாத்து.






      Dinamalar
      Follow us