sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அள்ளப்படாத குப்பை அல்லாடும் மக்கள்

/

அள்ளப்படாத குப்பை அல்லாடும் மக்கள்

அள்ளப்படாத குப்பை அல்லாடும் மக்கள்

அள்ளப்படாத குப்பை அல்லாடும் மக்கள்


ADDED : ஜூலை 11, 2025 03:19 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 03:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குதிரைகளால் அச்சம்

பழநி புதுதாராபுரம் ரோட்டில் குதிரைகள் சுற்றித் திரிவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது .இப்பகுதி பள்ளி மாணவர்கள் ஒரு வித அச்சத்துடன் செல்கின்றனர். குதிரைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.விக்னேஷ், பழநி.

................-------

ரோட்டில் பாயும் கழிவு நீர்

அய்யலுார் பொட்டிநாயக்கன்பட்டி பிரிவு அருகே ரோட்டோர பாலம் அடைப்பட்டுள்ளதால் கழிவு நீர் ரோட்டில் பாய்கிறது.அவ்வழியே செல்வோர் சுகாதாரக்கேட்டால் பாதிக்கின்றனர். இதன் மீது துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். --- மணி, அய்யலுார்.

.....................--------சேதமான நிழற்கூடம்

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் எம்.அம்மாபட்டி அருகே கொட்டாரபட்டி பஸ் ஸ்டாப் நிழற்கூடம் சேதமடைந்து விபத்து அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது.இங்கு பயணிகள் செல்ல அச்சப்படும் நிலையில் ரோட்டில் நிற்கின்றனர். -சி.முருகராஜ், கொட்டாரபட்டி.

....................--------

விபத்தை நோக்கி மின் கம்பம்

சாணார்பட்டி அருகே செங்குறிச்சி செல்லும் ரோட்டில் உள்ள மின்கம்பம் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. விபத்து அபாயம் உள்ளதால் சேதமான மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும். பழனியப்பன், கே.அய்யாபட்டி.

...........--------விபத்து அபாயம்

திண்டுக்கல் அருகே தோட்டனுாத்தில் மேல்நிலைத் தொட்டி அடிப்பகுதி சேதமடைந்துள்ளதால் விபத்து அபாயம் உள்ளது . இதன் துாண்கள் ரோட்டோரத்தில் இருப்பதால் இதை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழனிச்சாமி தோட்டனுாத்து.

...............--------

அள்ளப்படாத குப்பை

திண்டுக்கல்- திருச்சி ரோட்டில் குப்பை குவிந்து பல நாட்களாகியும் அள்ளாமல் உள்ளது. பிளாஸ்டிக் கலந்து சுகாதாரக்கேடுடன் உள்ளதோடு சுற்றுசூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை அகற்ற வேண்டும் . கோவிந்தன், திண்டுக்கல்.

...............--------

சாக்கடையை துார்வாருங்க

திண்டுக்கல் மேட்டுப்பட்டி தண்ணீர் தொட்டி ரோட்டில் சாக்கடையில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடை ஏற்படுத்துகிறது. குழந்தைகளும் உடல் நலம் பாதிக்கின்றனர் .சாக்கடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்,கல்யாணி, திண்டுக்கல்.

...............--------






      Dinamalar
      Follow us