/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரத்தில் மக்கள் நீதிமன்றம்
/
ஒட்டன்சத்திரத்தில் மக்கள் நீதிமன்றம்
ADDED : ஜூன் 18, 2025 04:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சார்பு நீதிமன்றத்தில் சட்டப்பணிகள் குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் சிறப்பு முகாம் நடந்தது.நீதிபதிகள் தீபா,  கபாலீஸ்வரர் தலைமை வகித்தனர்.    25 க்கு  மேற்பட்ட வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.
மோட்டார் வாகன விபத்து வழக்கில்   திருப்பூரை  சேர்ந்த  கண்ணன் 26,  என்பவருக்கு காப்பீட்டு தொகையாக ரூ.66 லட்சம்  வழங்கப்பட்டது. இதற்கான காசோலைகளை நீதிபதிகள் வழங்கினர்.

