sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வணிக நிறுவனங்களில் பெட்ரோல் டீசல் விற்பனை எங்கும் தாராளம்: கண்டுகொள்ளாத அதிகாரிகளால் விபத்து அபாயம்

/

வணிக நிறுவனங்களில் பெட்ரோல் டீசல் விற்பனை எங்கும் தாராளம்: கண்டுகொள்ளாத அதிகாரிகளால் விபத்து அபாயம்

வணிக நிறுவனங்களில் பெட்ரோல் டீசல் விற்பனை எங்கும் தாராளம்: கண்டுகொள்ளாத அதிகாரிகளால் விபத்து அபாயம்

வணிக நிறுவனங்களில் பெட்ரோல் டீசல் விற்பனை எங்கும் தாராளம்: கண்டுகொள்ளாத அதிகாரிகளால் விபத்து அபாயம்

1


ADDED : ஜன 14, 2025 05:49 AM

Google News

ADDED : ஜன 14, 2025 05:49 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தை பொறுத்தமட்டில் விவசாயமே பிரதானமாக உள்ளது. இங்கு நுாற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. நவீன தொழில்நுட்பத்தால் விவசாயம் இயந்திர மயமாக்கப்பட்ட நிலையில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் தேவை அத்தியாவசிய பொருளாக மாறி உள்ளது.

மலை சார்ந்த பகுதிகளில் இவை எளிதில் கிடைக்காத நிலையில் இவற்றை டீக்கடை, பெட்டிக்கடை, பலசரக்கு என பல்வேறு வணிகம் சார்ந்த கடைகளில் பாதுகாப்பற்ற நிலையில் விற்கப்படுகின்றன.

இவ்வாறாக விற்கப்படும் டீசல், பெட்ரோல் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய நிலையில் வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது என கூறலாம். அளவு குறைவுடன் கூடுதல் விலையில் இவை விற்கப்படுகிறது.

இதை கண்காணிக்க வேண்டிய போலீசார் , எரிபொருள் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் இவற்றை ஒரு பொருட்டாக கருத்தில் கொள்ளாமல் துளியும் கண்டு கொள்வதில்லை. இது போன்ற நிலை கொடைக்கானல் மேல்மலை, தாண்டிக்குடி கீழ் மலை, மலை சார்ந்த ஒட்டன்சத்திரம், நத்தம், பழநி வேடசந்துார், வடமதுரை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்கிறது.

அனுமதியின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களை ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அத்தியாவசிய பொருளான இவ்வகை எரிபொருளை எளிதில் கிடைக்க செய்யும் வகையில் மினி பெட்ரோல் பம்புகளை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் இயற்கை அலுவலர்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us