/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் பெட்ரோல் குண்டு வீச்சு
/
பழநியில் பெட்ரோல் குண்டு வீச்சு
ADDED : அக் 24, 2025 04:27 AM
சாமிநாதபுரம்: பழநி சாமிநாதபுரம் அருகே ஜி.வி.ஜி., நகரில் பெட்ரோல் குண்டு வீசிய மூன்று நபர்கள் தப்பி ஓடினர்.
பழநி சாமிநாதபுரம் ஜி.வி.ஜி., நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு மதுரையை சேர்ந்த ஹரிமணி 18, அவரது நண்பர்கள் முத்துக்குமார் 19, கவுதம் 19 ஆகியோர் வந்துள்ளனர். அவர்கள் போதையில் தகராறு செய்ததால் அக்கம்பக்கத்தினர் கண்டித்துள்ளனர். போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனால் கோபமடைந்த மூவரும் வீட்டின் அருகே இருந்த ராமாத்தாள் 55, வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர். வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த பூச்செடி சேதமடைந்தது.
அதனை தொடர்ந்து உலகநாதன் என்பவரின் கார் கண்ணாடியை கல் வீசி உடைத்தனர். வயலூர் பகுதியில் இருந்த பேக்கரி கண்ணாடியை உடைத்து, அதே பகுதியில் சேர்ந்த சீனிவாசன் என்பவரை தாக்கி விட்டு தப்பி ஓடினர். சாமிநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

