ADDED : ஜன 29, 2026 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: வேளாளர் உறவின்முறை , அனைத்து பிள்ளைமார் உறவின்முறையின் சார்பில் அரசியல் அங்கீகார மாநாடு விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கலில் பிப்.8 ல் நடக்க உள்ளது. இதில் 20 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர் என உறவின்முறை தலைவர் பந்தல் ராஜா தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: மதுரை மண்டல மாநாடாக சமூக மக்களுக்கான அங்கீகாரம் பெறுவதற்காக அரசியல் அங்கீகாரம் பெற வலியுறுத்தி மாநாடு பிப்.8 ல் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் நடத்த உள்ளோம்.
மதுரை மண்டல மாநாடு நடத்தி முடித்த பின் மாநில அளவிலான மாநாடு நடத்த தீர்மானித்துள்ளோம். இதில் அரசியல் அங்கீகாரம் பெறும் அளவில் ஏற்கனவே ஆதரவு அளித்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆதரவு தெரிவிப்போம் என்றார்.

