sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நிழற்குடையை மறைத்து டூவீலர்களை நிறுத்துவதால் பரிதவிப்பு

/

நிழற்குடையை மறைத்து டூவீலர்களை நிறுத்துவதால் பரிதவிப்பு

நிழற்குடையை மறைத்து டூவீலர்களை நிறுத்துவதால் பரிதவிப்பு

நிழற்குடையை மறைத்து டூவீலர்களை நிறுத்துவதால் பரிதவிப்பு


ADDED : அக் 16, 2024 06:06 AM

Google News

ADDED : அக் 16, 2024 06:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரத்தால் விபத்து அபாயம் : எரியோடு -திண்டுக்கல் ரோட்டில் பட்டுப்போன மரத்தால் விபத்து அபாயம் உள்ளது.போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் மரம் உள்ளதால் விபத்து ஏற்படும் முன் மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

--இஸ்மாயில், எரியோடு.

நிழற்குடை மறைப்பு : திண்டுக்கல் அரசு மருத்துவமனை அருகே உள்ள நிழற்குடையை மறைத்து டூ வீலர்களை நிறுத்துவதால், பயணிகள் மழை நேரங்களில் ஒதுங்க நிழற்குடைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .இத்ன மீது நடவடிக்கை வேண்டும்.

-ஜெயக்குமார், திண்டுக்கல்.

மழைநீருடன் கழிவுநீர் : திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானா அருகே மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.பஸ் ஸ்டாப் அருகே இப்பதால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது .கழிவு நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமரன், நாகல்நகர்.

கரூர் ரோட்டில் கழிவு நீர் : திண்டுக்கல் - பழைய கரூர் ரோட்டில் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் ரோட்டில் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக இருப்பதால் கழிவுநீர் ரோட்டில் செல்வதை தடுக்க வேண்டும்.

-ஈஸ்வரன், திண்டுக்கல்.

ரோடு சேதத்தால் பள்ளம் : அம்மையநாயக்கனுார் கிராம நிர்வாக அலுவலர் ,வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு செல்லும் பாதையில் ரோடு சேமடைந்து பள்ளம் ஏற்பட்டு கான்கிரீட் கம்பி வெளியே தெரிகிறது . விபத்து முன் சீர் செய்ய வேண்டும்.

-பழனிச்சாமி, அம்மைநாயக்கனுார்.

விபத்து அபாயம் : கொடைக்கானல் கோகினுார் அரசு விடுதி,குறிஞ்சியாண்டவர் கோயில் செல்லும் ரோட்டில் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றியமைக்க, மின் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ். வெற்றிவேல், கொடைக்கானல்.

குப்பையால் பாதிப்பு : தாராபுரம்- ஒட்டன்சத்திரம் ரோட்டில் இருந்து திண்டுக்கல் செல்லும் சர்வீஸ் ரோட்டின் வடபுறத்தில் வடிகால் சுற்றி குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இவற்றை அப்புறப்படுத்தி இங்கு குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.

--சித்தார்த்,ஒட்டன்சத்திரம்.






      Dinamalar
      Follow us