/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அண்ணன் மனைவி கொலை தம்பியை தேடுது போலீஸ்
/
அண்ணன் மனைவி கொலை தம்பியை தேடுது போலீஸ்
ADDED : பிப் 08, 2025 01:17 AM

நத்தம்:நத்தம் அருகே கள்ளதொடர்பால் ஏற்பட்ட தகராறில் அண்ணன் மனைவியை வெட்டி கொலை செய்த தம்பியை போலீசார் தேடுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் -நத்தம் அருகே விளாம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் 48. வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா 35.
இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. லட்சுமணனின் தம்பி சுரேஷ் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். சுரேஷிற்கும் சங்கீதாவிற்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இதனிடையே நேற்று மதியம் 3:00 மணிக்கு இருவரும் தனிமையில் இருந்த போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த சுரேஷ் அரிவாளால் சங்கீதாவை கழுத்து, கை, தலையில் வெட்டி விட்டு தப்பினார்.
இதில் சங்கீதா இறந்தார். சுரேைஷ, நத்தம் -இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தேடுகின்றனர்.

