/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரிசி கடத்தலை தடுக்க ஒருங்கிணைப்பு இன்றி போலீசார் திணறல் மதிப்பு கூட்டு பொருளாக்கி வெளிமாநிலங்களில் விற்பனை
/
அரிசி கடத்தலை தடுக்க ஒருங்கிணைப்பு இன்றி போலீசார் திணறல் மதிப்பு கூட்டு பொருளாக்கி வெளிமாநிலங்களில் விற்பனை
அரிசி கடத்தலை தடுக்க ஒருங்கிணைப்பு இன்றி போலீசார் திணறல் மதிப்பு கூட்டு பொருளாக்கி வெளிமாநிலங்களில் விற்பனை
அரிசி கடத்தலை தடுக்க ஒருங்கிணைப்பு இன்றி போலீசார் திணறல் மதிப்பு கூட்டு பொருளாக்கி வெளிமாநிலங்களில் விற்பனை
ADDED : ஜன 30, 2026 06:17 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் ரேஷன் அரிசியை கடத்தி மதிப்பு கூட்டு பொருளாக்கி வெளி மாநிலங்களில் விற்பனை செய்யும்நிலையில் இதை தடுக்கவேண்டிய பணியில் ஒருங்கிணைப்பு இல்லாததால் ரேஷன் அரிசி கடத்தல் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையில் போலீசார் திணறி வருகின்றனர்.
மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் மக்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு, சீனி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. இதில் அரிசி விலை இல்லாமலும் மற்ற பொருட்கள் மானிய விலையிலும் கிடைக்கிறது.
ரேஷன் பொருட்கள் வெளிச்சந்தை விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் தடைகள், கண்காணிப்புகளை மீறி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் நடந்துவருகிறது.
பொதுவிநியோகத்திட்டத்தில் நடக்கும் குற்றங்கள், கடத்தல்களை கண்டுபிடிப்பதிலும், தடுப்பதிலும் போலீசார் மெத்தனமாக செயல்படுவது குற்றங்கள் அதிகரிக்க முக்கிய காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புரோக்கர்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் ரேஷன் அரிசி மூடைகள் இங்கிருந்து வெளி மாவட்டம், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் கடத்தப்படுகிறது. கடத்தல்களில் ஈடுபடுவோர் சிறு குழுக்களாக இணைந்து சிண்டிகேட்' அமைத்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுகின்றனர்.
அதிகரித்திருக்கும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வருவாய்த்துறை, காவல்துறை, குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆகியோரின் ஒருங்கிணைந்த நடவடிக்கை இல்லாததால் போலீசார் திணறி வருகின்றனர்.

