sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : ஜூலை 06, 2024 06:09 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விபத்தில் மாணவிகள் காயம்

திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து வேலசேர்வைக்காரன் பட்டிக்கு அரசு பஸ் ஒன்று நேற்று மாலை புறப்பட்டது. தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த டிரைவர் ஜோசப் ஓட்டினார். பழநிரோடு முருகபவனம் அருகே வந்தபோது லாரி ஒன்று குறுக்கே வந்தது. அப்போது அரசு பஸ் லாரி மீது மோதியது. 2 பள்ளி மாணவிகள் காயமடைந்தனர். மேற்கு போலீசார் விசாரித்தனர்.

முதியவர் தற்கொலை

நத்தம்: கொண்டையம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி 64. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். வாழ்க்கையில் வெறுப்படைந்த விஷம் குடித்து தற்கொலை செய்தார். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி விசாரிக்கிறார்.

குட்கா பதுக்கிய இருவர் கைது

திண்டுக்கல்: இ.பி., காலனி அங்கன்வாடி மையம் அருகே பெரிய கோட்டையைச் சேர்ந்த ஆனந்தராஜ், என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்த லட்சுமணன் குட்கா பதுக்கி வைத்திருந்தனர். தாடிக்கொம்பு போலீசார் இருவரையும் கைது செய்து 30 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். தப்பிய இ.பி., காலனி கார்த்திக் குமார், ஆர்.எம்., காலனி சரவணனை தேடி வருகின்றனர்.

கஞ்சா விற்றவர் கைது

நெய்க்காரப்பட்டி: நெய்க்காரப்பட்டி அருகே கே.வேலுார் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் 62, கஞ்சா விற்றார். இவரை பழநி தாலுகா போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us