sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீஸ் செய்திகள்.....

/

போலீஸ் செய்திகள்.....

போலீஸ் செய்திகள்.....

போலீஸ் செய்திகள்.....


ADDED : டிச 11, 2024 05:33 AM

Google News

ADDED : டிச 11, 2024 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொழிலாளி மாயம்

எரியோடு: வடமதுரை செங்குறிச்சியை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி முத்துச்சாமி 32. எரியோடு ஓட்டல்களில் பணிபுரிந்தார். டிச.6 முதல் காணவில்லை. எரியோடு போலீசார் தேடுகின்றனர்.

தேனீக்கள் கொட்டியதால் காயம்

வடமதுரை:மோர்பட்டி ராமன்செட்டிகுளத்தில் கோப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று காலை ஆடு,மாடு மேய்த்தனர். அங்கிருந்த தேனீ கூடு கலைந்து கருப்புசாமி 36, சிங்கராயர் 58, சண்முகம் 60, பூரண மணி 65 ஆகியோரை கொட்டியது. இதனால் உடல் நல பாதிப்பிற்குள்ளான இவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

போதை பெண் கைது

பழநி: பழநி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் புறக்காவல் நிலையம் உள்ளது. இங்கு போலீசார் அமர இருக்கைகள் உள்ளது. நேற்று முன்தினம் இரவு திடிரென இங்கு நுழைந்த பெண் புறக்காவல் நிலையத்திலிருந்த இருக்கைகளை துாக்கி வெளியே வீசினார். திருச்சி மாவட்டம் லால்குடி பழனியம்மாள் 55, மது போதையில் இருந்தது தெரிந்தது. பழநி டவுன் போலீசார் அவரை கைது செய்தனர்.

விபத்தில் பெண் காயம்

எரியோடு: குஜிலியம்பாறையை சேர்ந்தவர் வேணி 36. வடுகம்பாடி கோம்பை பிரிவு அருகே சென்றபோது அவ்வழியே வந்த மினி டிப்பர் லாரி மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது. விபத்தில் காயமடைந்த வேணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us