sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீஸ் செய்திகள் ...

/

போலீஸ் செய்திகள் ...

போலீஸ் செய்திகள் ...

போலீஸ் செய்திகள் ...


ADDED : ஜன 05, 2024 04:45 AM

Google News

ADDED : ஜன 05, 2024 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

வடமதுரை: பிலாத்தை சேர்ந்த வழக்கறிஞர் பகவத்சிங் தாயார் சரசு 52. இவரது குடும்பத்திற்கும் உறவினரான சில்வார்பட்டி கர்ணன் 52, இடையே சொத்து பிரச்னை உள்ளது. வீட்டில் இருந்த சரசுவிடம் உறவினர்களான பிலாத்து சுப்பிரமணி 43, சரவணன் 43, ஆகியோருடன் சேர்ந்து கர்ணன், அவரது மனைவி சித்ரா 40, தாக்கினர். 4 பேரிடமும் எஸ்.ஐ., அங்கமுத்து விசாரிக்கிறார்.

பெண்கள் மாயம்

நிலக்கோட்டை : வசந்தம் நகர் அழகர்சாமி மனைவி சந்திரலேகா 38. மனைவி அலைபேசியில் அடிக்கடி பேசி வந்ததை கண்டித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு வீட்டை விட்டு சென்றவர் திரும்பவில்லை. நிலக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

* மெட்டூரை சேர்ந்தவர் சித்ரா 53. வீட்டை விட்டு சென்றவர் திரும்பவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.

தீ விபத்தில் பலி

பழநி: திண்டுக்கல் மருதாய்குளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் 50. குடும்பத்தை பிரிந்து பழநி காந்தி மார்க்கெட் ரோட்டோரத்தில் தங்கினார். போதையில் பீடி பற்ற வைத்தபோது போர்வையில் தீ பரவ உடலில் பற்றியது. அங்கு இருந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இறந்தார்.

முதியவர் பலி

திண்டுக்கல்: ஆர்.எம்.காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் 50. குடும்பத்தினரை விட்டு தனியாக இருந்தார். நேற்று திண்டுக்கல் ஓதசுவாமி கோயில் அருகே இறந்து கிடந்தார். போலீசார் விசாரித்தனர்.

டூவீலர் திருடிய மூவர் கைது

கொடைக்கானல்: மதுரையை சேர்ந்தவர்கள் அப்துல் சலீம் 33, பிரபாகரன் 28, அந்தோணி செல்வகுமார் 33. மூவரும் சில மாதங்களுக்கு முன் கொடைக்கானல் அண்ணா சாலையில் வீட்டின் முன் நிறுத்திய டூவிலரை திருடி சென்றனர். போலீசார் மூவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us