sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : ஜன 07, 2024 07:02 AM

Google News

ADDED : ஜன 07, 2024 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாடு மீட்பு

திண்டுக்கல்: கல்லோடை கிராமத்தை சேர்ந்தவர் ராபர்ட் கென்னடி. இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் 50 ஆழத்தில் தண்ணீரில்லாத கிணறு உள்ளது. அவ்வழியாக மேய்ச்சலுக்காக வந்த பசு மாடு கால் தவறி கிணற்றில் விழுந்து. திண்டுக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி மாவட்ட அலுவலர் சிவகுமா தலைமையில் வீரர்கள் மாட்டை மீட்டனர்.

நகை, பணம் கொள்ளை

வேடசந்துார்: இந்திரா நகரில் சமையல் பாத்திரம் வாடகை கடை நடத்தி வருபவர் அங்குராஜ் 50. வாய் பேச முடியாத இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர் மறுநாள் கடைக்கு வந்த போது பின் கதவை உடைத்து கடை 8 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது.

* வேடசந்துார் காந்தி நகரில் உள்ள கனரக வாகன எடை போடும் அலுவலகத்தில் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையர்கள் எடுத்து சென்றனர். வேடசந்துார் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விசாரிக்கிறார்.

ரயிலிலிருந்து விழுந்தவர் காயம்

திண்டுக்கல்: ராஜஸ்தானை சேர்ந்தவர் கஜேந்திரன்41. தாயுடன் ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா ரயிலில் பயணித்தார். நேற்று அதிகாலை 1:00 மணிக்கு திண்டுக்கல் ஏ.ஆர்.மைதானம் அருகே வந்தபோது கஜேந்திரன் ரயிலிலிருந்து தவறி விழுந்து காயமடைந்தார். அவரை ரயில்வே போலீசார் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் இரண்டெலபாறையை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன் 42, ஜெயக்குமார் 30. இவர்கள் இருவரும் புகையிலை விற்று வந்துள்ளனர். தாலுகா போலீசார் இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us