sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : மார் 18, 2025 05:31 AM

Google News

ADDED : மார் 18, 2025 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கத்தியை காட்டி செயின் பறிப்பு

வேடசந்துார்: நேருஜி நகரை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் பழனியப்பன் .இவரது மனைவி சிவானந்தம் 68 , வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகை , காதில் அணிந்திருந்த தோடை காதோடு அறுத்துச்

சென்றார். வேடசந்துார் இன்ஸ்பெக்டர் வேலாயுதம், எஸ்.ஐ., அருண் நாராயணன் தலைமையிலான போலீசார் சி.சி. டிவி., பதிவுகளின்படி குஞ்சுவீரன்பட்டியை சேர்ந்த சக்திவேலை 28, கைது செய்து நகை, கத்தியை பறிமுதல் செய்தனர்.

சூதாடிய 7 பேர் கைது

வடமதுரை : தாமரைப்பாடி மந்தை குளம் பகுதியில் சூதாடிய எரியோடு நந்தகோபால் 65, தாமரைப்பாடி மணிகண்டன் 45, ஷாஜகான் 52, கருப்புசாமி 35, பிச்சை 65, சவுந்தரபாண்டியன் 55, கதிர்வேல் 24 ,ஆகிய 7 பேரை வடமதுரை எஸ்.ஐ.,க்கள் தாவூத் உசேன், முத்துச்சாமி கைது செய்தனர்.

ஆசிரியரை தாக்கிய இருவர் கைது

வடமதுரை : வேல்வார்கோட்டை மூணாண்டிபட்டியை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் கார்த்திக் 27. திண்டுக்கல் தனியார் கல்லுாரியில் பணிபுரியும் இவர் சில மாதங்களாக பெண் ஒருவரிடம் போனில் பேசி வந்தார். இதை பெண்ணின் உறவினரான தன்னாசி பாறைப்பட்டி பிரேம்குமார் 24, கண்டித்தார். ஆனாலும் தொடர்ந்து பேசி வந்ததால் நண்பர் மோர்பட்டி ராகுல்பாரதியுடன் 23 , சேர்ந்து கார்த்திக்கை பீர் பாட்டிலால் தாக்கினர். பிரேம்குமார், ராகுல்பாரதி ஆகியோரை வடமதுரை எஸ்.ஐ., பாண்டியன் கைது செய்தார்.






      Dinamalar
      Follow us