sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பள்ளி, கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்

/

பள்ளி, கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்

பள்ளி, கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்

பள்ளி, கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்


ADDED : ஜன 23, 2025 04:42 AM

Google News

ADDED : ஜன 23, 2025 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் தனியார் பள்ளி, கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் அனுப்பியது யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.

திண்டுக்கல் பழைய நீதிமன்றம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் சி.பி.எஸ்.இ.,பள்ளி, பழநி ரோடு ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி என இரு இடங்களிலும் வெடிகுண்டு இருப்பதாக பள்ளி, கல்லுாரிக்கு ஜன.20 மதியம் 3:00 மணிக்கு இமெயில் வந்தது. அதிர்ச்சியடைந்த பள்ளி, கல்லுாரி நிர்வாகத்தினர் மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றி விட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். எஸ்.பி., பிரதீப் தலைமையிலான போலீசார் பள்ளி,கல்லுாரியில் சோதனையில் ஈடுபட்டனர். பொய்யான தகவல் என்பது தெரிந்தது. பள்ளி, கல்லுாரிக்கு அனுப்பிய இமெயில் இரண்டும் ஒரே முகவரியை கொண்டிருந்தது. சைபர்கிரைம் போலீசார் இமெயில் அனுப்பிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருந்தும் அவர்களால் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us