நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : வடமதுரை ஏ.வி.பட்டியில் எம்.எல்.ஏ., நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை தொட்டி திறப்பு, சிட்டம்பட்டியில் ரூ.8 லட்சத்தில் கலையரங்கம் கட்ட பூமி பூஜை நடந்தது.
காந்திராஜன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் நிருபாராணி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் கல்பனாதேவி வரவேற்றார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன், நகர செயலாளர் கணேசன், பேரூராட்சி துணைத் தலைவர் மலைச்சாமி, கவுன்சிலர்கள் சவுந்தரம், சசிக்குமார், கார்த்திகேயன், சுப்பிரமணி பங்கேற்றனர்.