/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் பள்ளமான ரோடுகள்; கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை
/
'கொடை'யில் பள்ளமான ரோடுகள்; கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை
'கொடை'யில் பள்ளமான ரோடுகள்; கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை
'கொடை'யில் பள்ளமான ரோடுகள்; கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை
ADDED : அக் 26, 2025 05:19 AM

கொடைக்கானல்: -கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் ரோடுகள் சேதடைந்து நாள்தோறும் பயணிகள் விபத்து அபாயத்தில் சென்று வருகின்றனர்.
சர்வதேச சுற்றுலாத்தலமாக உள்ள கொடைக்கானலுக்கு நாள் தோறும் ஏராளமானோர் வருகின்றனர்.
இதில் பெருமாள்மலை வெள்ளி நீர்வீழ்ச்சி ரோடு பல்லாங்குழி பள்ளங்களால் மோசமான நிலை, அப்சர்வேட்டரி பூம்பாறை ரோடு ராட்சத பள்ளங்களால் விபத்து அபாய நிலை, வில்பட்டி, பாம்பார்புரம் ரோடு என சுற்றுலா தல ரோடுகளின் பரிதாப நிலையால் பயணிகள் நித்தம் அவதியடைகின்றனர்.
கலையரங்கம் அப்சர்வேட்டரி இடையே தாழ்வான ரோட்டில் மழை தண்ணீர், ஊற்று நீர் செல்ல வழி இல்லாமல் ரோட்டில் பெருக்கெடுத்து 1 கி.மீ., அளவிற்கு ரோடு நடுவே அரிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கின்றன இது ரோஜா பூங்கா, வனச் சுற்றுலா தலம்,பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் , மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், கூக்கால் ஏரி, மத்திய அரசின் ரோம ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள், 20க்கும் மேற்பட்ட மேல்மலைகிராமங்களுக்கு செல்லும் முக்கிய ரோடாக உள்ளது.
இந்த ரோட்டில் மழை நீர், ஊற்று நீர் வடிந்தோட வடிகால் அமைப்புகள் முறையாக ஏற்படுத்தாத நிலையில் ரோடு அமைத்த சில மாதங்களிலே சேதமடைவது வாடிக்கையாக உள்ளது.
அவ்வப்போது பேட்ஜ் வொர்க் (தற்காலிக சீரமைப்பு) செய்தும் பலனின்றி கனமழையால் அரித்து மேலும் பள்ளங்கள் அதிகரிக்கின்றன.
அதிருப்தி சில தினத்திற்கு முன் பெய்த கனமழையால் ரோட்டின் நடுவே ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டன. நெடுஞ்சாலைத்துறை ரோட்டை சீரமைக்காததால் நாள்தோறும் வாகனங்கள் ஊர்ந்தும், பழுதாகி விபத்தில் சிக்குகின்றன.
முக்கிய சுற்றுலா தலத்திற்கு செல்லும் ரோட்டின் பரிதாப நிலை குறித்து பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இப்பகுதியை கடந்து செல்ல தாமதமாவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோடுகளை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தற்காலிகமாக சீரமைக்க வெர்ட் மிக்ஸ் அமைத்த போதும் கன மழை பெய்யும் தருணங்களில் அரித்து செல்லப்படுகிறது.
ரோடை புதுப்பிக்க தற்போது நிதி இல்லாத நிலையில் தற்காலிகமாக சீரமைக்கும் நடவடிக்கையே தொடரும்'' என்றார்.

