/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
/
சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
ADDED : நவ 18, 2025 04:27 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
பிரதோஷ நாளான நேற்று திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் காலையில் ஞானாம்பிகை- காளஹஸ்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு நந்தி, கொடிமரம், காளஹஸ்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
ஆர்.எம்.காலனி வி.ஐ.பி.,நகர் ஸ்ரீ சொர்ணாம்பிகைஉடனுறை குபேரலிங்கேஸ்வரர் கோயிலில் நந்தி, ஸ்ரீ குபேரலிங்கேஸ்வரருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்ய பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.
திண்டுக்கல் காந்திஜி புதுரோடு ஆதிசிவன், மேற்கு ரதவீதி சிவன், முள்ளிப்பாடி ஆஞ்ச நேயர் உட்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன்கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடை பெற்றன. எம்.வி.எம்., நகர் தென் திருப்பதி வெங்டஜலபதி கோயிலில் லட்சுமி நரசிம்மர் சன்னதியில் சிறப்பு அபிேஷகம், தீபாராதனைகள் நடந்தது.
சிவாலயங்களில், கார்த்திகை மாதங்களில் வரும் திங்கட்கிழமையில், சங்காபிேஷக பூஜை நடத்தப்படும். அதன்படி, நேற்று முதல் சோமவார சங்காபிேஷக பூஜை துவங்கியது.
பழநி: பழநி, முருகன் கோயிலில் உள்ள கைலாசநாதர் சன்னதி பாத விநாயகர் கோயில் அருகே உள்ள மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர், கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன், கோதைமங்கலம் பெரியாவுடையார், ஆயக்குடி சோளீஸ்வரர், பாலசமுத்திரம் அமுதீஸ்வரர், மதனபுரம் அண்ணாமலை உண்ணாமுலை நாயகி அம்மன், கலையம்புத்தூர் கல்யாணியம்மன் கைலாசநாதர் உட்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடை பெற்றது.
ஒட்டன்சத்திரம்: காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் சிவலிங்கம், நந்திக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாரதனை நடந்தது.
விருப்பாச்சி தலையயூற்று ஸ்ரீநல்காசி விஸ்வநாதர், நவாமரத்துப்பட்டிபுதூர் ஸ்படிகலிங்கேஸ்வரர், ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வரர் கோயில்களில் வழிபாடுகள் நடந்தது.
வடமதுரை: மீனாட்சி சுந்தரேஸ்வரர், தென்னம்பட்டி நந்தீஸ்வரன், சிங்காரக்கோட்டை நாகநாத சுவாமி, அய்யலுார் களர்பட்டி ஆதிசிவன், எரியோடு சாய் பாபா ஞானாலயம் உள்ளிட்ட கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சின்னாளபட்டி: சதுர்முக முருகன் கோயிலில் திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அஷ்டோத்திர பூஜையுடன், மகா தீபாராதனை நடந்தது. கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி, காரமடை ராமலிங்க சுவாமி, சித்தையன்கோட்டை காசி விஸ்வநாதர் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

