/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
/
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED : ஆக 07, 2025 05:12 AM
திண்டுக்கல் : பிரதோஷத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் ஞானாம்பிகை- காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரர்- அபிராமி அம்மனுக்கு காலையில்சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 4 :00 மணிக்கு நந்தி, கொடிமரம் , காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. ஆர்.எம்.காலனி - விஐபி நகர் ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனுறை குபரேலிங்கேஸ்வரர் கோயிலில் நந்திக்கும், ஸ்ரீ குபேரலிங்கேஸ்வரருக்கும் 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்ய பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் ரயிலடி விநாயகர் கோயில், கூட்டுறவு நகர் விநாயகர் கோயில், பழநிரோடு பத்திரகாளியம்மன் கோயில் ,ஜான் பிள்ளை சந்து வாராகிஅம்மன் கோயில் ,காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோவில், மேற்கு ரதவீதி சிவன் கோவில், முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோயில் உட்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திண்டுக்கல் எம்.வி.எம்., நகர் தென் திருப்பதி வெங்டஜலபதி கோயில் லட்சுமி நரசிம்மர் சன்னதியில் சிறப்பு அபிேஷகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நத்தம் : கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் 16 வகை அபிஷேகம், தீபாராதனை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது. மூலவர் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஆவிளிபட்டி ஆதி சுயம்பு ஈஸ்வரர் கோயில், காம்பார்பட்டி மாதா புவனேஸ்வரி உடனுறை ஆத்ம லிங்கேஸ்வரர் 1008 சிவன் கோயில், குட்டூரில் உள்ள உண்ணாமலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.
வடமதுரை : வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தென்னம்பட்டி நந்தீஸ்வரன் கோயில், சிங்காரக்கோட்டை நாகநாத சுவாமி கோயில், அய்யலுார் களர்பட்டி ஆதிசிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. திருமஞ்சனம், சந்தனம், இளநீர், பன்னீர், பால், விபூதி உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம் : காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் சிவலிங்கம், நந்திக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாரதனை நடந்தது.ரத்தினகிரீஸ்வரர் ,விருப்பாச்சி தலையூற்று ஸ்ரீநல்காசி விஸ்வநாதர், நவாமரத்துப்பட்டிபுதுார் ஸ்படிகலிங்கேஸ்வரர் , பஞ்சலிங்கேஸ்வரர் கோயிலில் 16 வகை அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.
சின்னாளபட்டி : சதுர்முக முருகன் கோயிலில் திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் ,அஷ்டோத்திர பூஜையுடன் மகா தீபாராதனை நடந்தது.கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், சித்தையன்கோட்டை காசி விஸ்வநாதர் கோயிலிலும் வழிபாடு நடந்தது.