/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
/
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED : நவ 04, 2025 04:29 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பிரதோஷ நாளான நேற்று திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் காலையில் ஞானாம்பிகை- காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரர்- அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு நந்தி, கொடிமரம், காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. ஆர்.எம்.காலனி - வி.ஐ.பி. நகர் ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனுறை குபரேலிங்கேஸ்வரர் கோயிலில் நந்தி , ஸ்ரீ குபேரலிங்கேஸ்வரருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்ய பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.
திண்டுக்கல் காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோயில், மேற்கு ரதவீதி சிவன் கோயில், முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோயில் உட்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திண்டுக்கல் எம்.வி.எம்., நகர் தென் திருப்பதி வெங்டஜலபதி கோயிலில் லட்சுமி நரசிம்மர் சன்னதியில் சிறப்பு அபிேஷகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சின்னாளபட்டி: சதுர்முக முருகன் கோயிலில் திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்ய,அஷ்டோத்திர பூஜை , மகா தீபாராதனை நடந்தது.பித்தளைப்பட்டி அண்ணாமலையார் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், சித்தையன்கோட்டை காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
நத்தம்: கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் சுவாமி. நந்திக்கு 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மேளதாளம் முழங்க சுவாமி புறப்பாடு நடந்தது.
அய்யாபட்டி சிவதாண்டவ பாறை ருத்ர லிங்கேஸ்வரர் கோயில், காம்பார்பட்டி மாதா புவனேஸ்வரி உடனுறை ஆத்மா லிங்கேஸ்வரர் 1008 சிவலிங்கம் கோயில், சிறுமலை அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடம், குட்டூரில் உண்ணாமலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோயிலிலும் பிரதோஷ விழா நடந்தது.
ஒட்டன்சத்திரம்: காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் சிவலிங்கம், நந்திக்கு அபிஷேகம் ,தீபாரதனை நடந்தது. நவாமரத்துப்பட்டிபுதுார் ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயில், ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வரர் கோயில்,விருப்பாச்சி தலையயூற்று ஸ்ரீநல்காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது.
வடமதுரை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தென்னம்பட்டி நந்தீஸ்வரன் கோயில், சிங்காரக்கோட்டை நாகநாத சுவாமி கோயில், அய்யலுார் களர்பட்டி ஆதிசிவன், எரியோடு சாய் பாபா ஞானலாயம் உள்ளிட்ட கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.
பழநி: முருகன் கோயிலில் உள்ள கைலாசநாதர் சன்னதி, பாத விநாயகர் கோயில் அருகே மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயில், கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோயில், கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயில், பாலசமுத்திரம் அமுதீஸ்வரர் கோயில், மதனபுரம் அண்ணாமலை உண்ணாமுலை நாயகி அம்மன் கோயில், கலையம்புத்துார் கல்யாணியம்மன் கைலாசநாதர் கோயில், ராமநாதநகர் லட்சமிநரசிம்மர் கோயிலில் ஐஸ்வர்ய லிங்கேஸ்வரர் சன்னதி உட்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

