ADDED : பிப் 08, 2024 06:32 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில் அமைந்துள்ள கைலாசநாதருக்கும்,நத்திகேஸ்வரருக்கும் பிரதோஷத்தை முன்னிட்டு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்துக்கு பின் தீபாராதனை நடந்தது. இதேபோல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள பத்மகிரீஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், நந்தீஸ்வரர் சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் கோயில் உள்பிரகாரத்தில் அம்பாளுடன் சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.முள்ளிப்பாடி திருகாமேஷ்வரர் கோயில், கசவனம்பட்டி மவுனகுருசாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்,தென்னம்பட்டி நந்தீஸ்வரன் கோயில், சிங்காரக்கோட்டை நாகநாத சுவாமி கோயில், அய்யலுார் களர்பட்டி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. திருமஞ்சனம், சந்தனம், இளநீர், பன்னீர், பால், வீபதி உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் சிவலிங்கம், நந்திக்கு 16 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தது.
நவாமரத்துப்பட்டிபுதூர் ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயிலில் பால், இளநீர், பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாரதனை நடந்தது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயிலில், தேய்பிறை பிரதோஷ பூஜை நடந்தது. மூலவர், ஓம்கார நந்திக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது.
கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், பிரதோஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
பழநியில் சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மாலை சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பழநி கோதைமங்கலம் பெரிய ஆவுடையார் கோயில், அடிவாரம் மதனபுரம் அண்ணாமலை உண்ணாமுலை நாயகி அம்மன் கோயில், பழநி இடும்பன் கோயில், அடிவாரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சன்னதி வீதி, வேளீஸ்வரர் கோயில் ஆகியவற்றில் மாலை நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடந்தது.

