/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரத்தில் அவரை விலை உயர்வு
/
ஒட்டன்சத்திரத்தில் அவரை விலை உயர்வு
ADDED : அக் 03, 2024 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் அவரைக்காய் விலை ரூ.50 ஆக அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் வடகாடு, கண்ணனுார் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவில் அவரைக்காய் பயிரிடப்படுகிறது. பல இடங்களில் அறுவடை நடந்ததால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்தது. அப்போது ஒரு கிலோ ரூ.15க்கு விற்றது. தற்போது அறுவடை குறைந்து வரத்தும் குறைந்த நிலையில் அவரைக்காய் கிலோ ரூ.50 க்கு விற்கப்பட்டது.