/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சித்திரை விழாவில் தீர்த்த குடங்களுடன் ஊர்வலம்
/
சித்திரை விழாவில் தீர்த்த குடங்களுடன் ஊர்வலம்
ADDED : ஏப் 24, 2025 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரியோடு: எரியோடு மணியகாரன்பட்டி தாயம்மன், வீரநாகம்மன், எருதமதாத்தப்பன், கிருஷ்ணர், முனியப்பசுவாமி கோயிலில் சித்திரை விழா நடந்தது.
தமிழ் புத்தாண்டு தினமான ஏப்.14 முதல் மாலை அணிந்து விரதம் துவக்கிய பக்தர்கள் செம்பாறை கன்னிமார் கோயில் ஊற்றில் இருந்து தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக கோயில் வந்தனர். நேற்று காலை தீர்த்த அபிஷேகம், பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. ஏற்பாட்டினை ஒக்கலிகர் வெள்ளவர் குல சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.