/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எஸ்.ஐ.ஆர்., அவகாசம் கோரி ஆர்ப்பாட்டம்
/
எஸ்.ஐ.ஆர்., அவகாசம் கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 19, 2025 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்.,) மேற்கொள்ள கால அவகாசம் வழங்கிடக்கோரி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜான்பாஸ்டின் டல்லஸ், விக்னேஷ் தலைமை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் சுகந்தி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி, நகராட்சி, சங்க மாநிலத் தலைவர் முருகானந்தம், அங்கன்வாடி ஊழியர்கள், தலைவர் செல்வ தனபாக்கியம் கலந்து கொண்டனர்.

