ADDED : டிச 29, 2025 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை:பி.கொசவபட்டியில் வேடசந்துார் வீரா சாமிநாதன் அறக்கட்டளை, திண்டுக்கல் கே.டி., மருத்துவமனை இணைந்து பொது மருத்துவ முகாம் நடத்தின. தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன் தலைமை வகித்தார்
அறக்கட்டளை நிறுவனர் வீரா சாமிநாதன் முகாமை துவக்கி வைத்தார். டாக்டர் துரைமுருகன் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். தி.மு.க., கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு அமைப்பாளர் சுப்புராமன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கே.பி.சிவா, சுற்றுசூழல் அணி துணை அமைப்பாளர் முனியப்பன் பங்கேற்றனர்.

