sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 கறிக்கடை தொழிலாளி வெட்டிக்கொலை

/

 கறிக்கடை தொழிலாளி வெட்டிக்கொலை

 கறிக்கடை தொழிலாளி வெட்டிக்கொலை

 கறிக்கடை தொழிலாளி வெட்டிக்கொலை


ADDED : டிச 29, 2025 05:39 AM

Google News

ADDED : டிச 29, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் வீடுபுகுந்து கறிக்கடை தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மேட்டுப்பட்டி தெற்குத்தெருவை சேர்ந்தவர் ராஜா 26, கறிக்கடை தொழிலாளி. வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் தொழிலும் செய்துள்ளார். இவருக்கும், ராமையன்பட்டி கணேசபுரம் பகுதியை சேர்ந்த 45 வயது பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்துள்ளது.

இதுதொடர்பாக, பெண்ணின் உறவினரான ஆர்.வி., நகரை சேர்ந்த உதயா 19 என்பவருக்கும், ராஜாவுக்கும் இடையே முன்பகை இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, கடன் தொகையை வசூலிப்பது தொடர்பாக கணேசபுரத்தில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு ராஜா சென்றார்.

இதையறிந்த, உதயா, தனது நண்பர்களான முருக பவனம் முத்துராஜ் நகர் பாண்டியராஜன் 18, சோலை ஹால் மதுரை வீரன் நெட்டுத்தெரு விமல் 18, ஆர்.வி.நகர் முனியப்பன் கோவில் தெரு ஹரிஷ் 20 ஆகியோருடன் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கணேசபுரத்தில் உள்ள பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து ராஜாவை வெட்டிக்கொலை செய்தனர். இதுதொடர்பான புகாரில் உதயா, அவரின் நண்பர்கள் உள்ளிட்ட 4 பேரையும் திண்டுக்கல் தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us