நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:   திண்டுக்கல் பி.எம் கேந்திரிய வித்யாலயாவில்  பரிக் ஷாபே சர்ச்சா 2025 ஐ நடந்தது. இதில் 'பாரத் ஹைன் ஹம்  என்ற காணொளி திரையிடப்பட்டது.
தொடர்ந்து வினாடி வினா போட்டி  நடந்தது,   அச்யுதா பப்ளிக் பள்ளி, பார்வதியின் அனுகிரஹா சர்வதேச பள்ளி , தேவாங்கர் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளை  சேர்ந்த 100க்கு மேற்பட்ட மாணவர்கள்   பங்கேற்றனர்.
அச்யுதா பள்ளி  மாணவர்  ராகுல் முதல் பரிசு, பார்வதி  அனுகிரஹா சர்வதேச பள்ளி  மாணவி ஜெய் ஹர்ஷினி 2ம் பரிசு, 3வது பரிசை அச்யுதா பப்ளிக் பள்ளி மாணவர் எஸ்.மிதுன் சக்ரவர்த்தி பெற்றனர்.  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  பள்ளி முதல்வர் ராம்குமார்  சான்றிதழ்களை வழங்கினார்.

