
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாமிநாதபுரம்: பழநி அருகே முத்துநாயக்கன்பட்டி பகுதியில் ரேக்ளா பந்தயம் நடந்தது.
பழநி தொப்பம்பட்டி ஒன்றியத்தில் முத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ரேக்ளா பந்தயம் நடந்தது. இதனை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி துவங்கி வைத்தார். இதில் இப்பகுதியில் கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பந்தய வண்டிகள் கலந்து கொண்டன. இதில் பெரிய காளைகள், சிறிய காளைகள் என பிரிக்கப்பட்டு 300 மீ., 200 மீ., துாரத்திற்கு இலக்கை நிர்ணயம் செய்து போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாடுகளுக்கு முதல் பரிசாக ரூ.ஒரு லட்சமும், 2ம் பரிசாக ரூ.75 ஆயிரம், 3ம் பரிசாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் மகுடீஸ்வரன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

