ADDED : ஜன 19, 2025 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 2வது நாளாக மழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கொடைக்கானலில் சில வாரங்களாக வறண்ட வானிலையுடன் உறை பனி நிலவியது. சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பனியின் தாக்கம் தணிந்தது.
இருநாட்களாக நகரை பனிமூட்டம் சூழ்ந்தது. மிதமான சாரல் மழை மாலை வரை பெய்தது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றன. தொடர் விடுமுறையால் நகரில் முகாமிட்டிருந்த சுற்றுலா பயணிகள் 2 நாட்களாக இடைவிடாது நீடித்த மழை, சீதோஷ்ண நிலையால் விடுதிகளில் முடங்கினர். சுற்றுலா தலங்கள் பயணிகள் வரத்தின்றி வெறிச்சோடியது.
காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. வழக்கத்திற்கு மாறான சீதோஷ்ண நிலையால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.