
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்:கொடைக்கானலில் சில தினங்களாக வறண்ட வானிலையும் கடும் பனிமூட்டத்துடன் குளிர் நிலவிய நிலையில் நேற்று காலை வெயில் பளிச்சிட்டது .
மதியத்திற்கு பின் நகரை பனிமூட்டம் சூழ்ந்தது. வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன. தொடர்ந்து மழை பெய்தது. சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடி படகு, சைக்கிள் சவாரி செய்தனர்.