/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இழப்பீடு கோரி உறவினர்கள் தர்ணா
/
இழப்பீடு கோரி உறவினர்கள் தர்ணா
ADDED : நவ 21, 2025 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி மருத்துவமனையில் இழப்பீடு கேட்டு விபத்தில் இறந்தவரின் உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பழநி பெரும்பள்ளம் பட்டிக்காடு பகுதியை சேர்ந்த பாண்டியன் 27, டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சென்ற போது விபத்தில் சிக்கி இறந்தார். இவரது உடல் பழநி மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உறவினர்கள் இழப்பீடு கோரி தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு வார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர் .

